வலங்கைமான் அருகில் உள்ள குடவாசல் ஒன்றியத்தில் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் செயல்படுவதற்கான தலைமை ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள குடவாசல் ஒன்றியத்தில் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் செயல்படுவதற்கான தலைமை ஆசிரியர் கூட்டம் வட்டார வள மையத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வட்டார கல்வி அலுவலர் குமரேசன் தலைமை வகித்தார், வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பூபாலன் பேசினார். திட்டமானது 15 வயதுக்கு மேற்பட்ட படிப்பறிவு இல்லாதவர்களுக்கு உருவாக்கப்படுகிறது.
தன்னார்வலர்களை கொண்டு கற்பித்தல் நடைப்பெறும். 726 கற்றாளர்களை கண்டறிந்து கற்பித்த நிகழ்வதற்கான அறிவுரைகளை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் மணிகண்டன் கூறினார். இந்நிகழ்வில் காத்தமுத்து, கவிதா, மணிக்கண்ணன் ஆகிய ஆசிரிய வளமைய பயிற்றுநர், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.