வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல்

தாடிக்கொம்பு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை

திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்தியாக உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு இன்று (ஜூலை-10) தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு
பைரவருக்கு இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி கோயமுத்தூர், வெள்ளக்கோவில், திருப்பூர், ஈரோடு கரூர் பல்லடம் உடுமலைப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *