வலங்கைமானில் ஸ்ரீ கருந்தார் குழலி உடனாகிய ஸ்ரீ அக்னீபுரீஸ்வரர் ஆலயத்தில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் லாயம்
கோல்டன் சிட்டி காந்தி நகரில் எழந்தருளிக்கும்
ஸ்ரீ கருந்தார் குழலி உடனாகிய ஸ்ரீ அக்னீபுரீஸ்வரர் ஆலயத்தில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 12-ந்தேதி புதன்கிழமை மாலை 5மணிக்கு யாகசாலை பிரவேசம்,கணபதி பூஜை, அஷ்டலட்சுமி பூஜை, வாஸ்து சாந்தி, கலச பூஜை, முதல் கால யாகம்,பூர்ணாஹுதி, தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல். இரவு 9.30
மணிக்கு சுவாமிக்கு மருந்து சாத்துதல். மறுநாள் 13-ந் தேதி காலை 7மணிக்கு கோ பூஜை, இரண்டாம் கால
பூஜை, கடம் புறப்பாடு, சரியாக 10.30 மணிக்கு
திருக்குட நன்னீராட்டு,அபிஷேகம், தீபாராதனை, ருட்பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை லாயம்கோல்டன் சிட்டி,காந்தி நகர் வாசிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.