சென்னை கொளத்தூர் செய்தியாளர்
சென்னையில் போதை பொருள்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுக்க போலீசார் பலவழிகளில் போராடி வருகின்றனர். அதன்படி புழல் சரக உதவி கமிஷனர் ஆதிமூலம் அறிவுறுத்தலின் பேரில்கொளத்தூர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட மாதவரத்தில் உள்ள பேக்கர்ஸ் மூவர்ஸ் உரிமையாளர்களை காவல் நிலையம் அழைத்து வந்து போதை பொருள் கடத்தலை தடுக்கும் வழிமுறைகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது .
இதில் லாரிகளில் தங்களது நிறுவனத்தின் மூலமாக பொருட்களை வாகனங்களில் ஏற்றும் பொழுது அதில் சந்தேகப்படும்படியான பொருட்கள் ஏதேனும் இருந்தால் இதுபற்றி உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் மேலும் இதுபோல் போதை பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக ஏதேனும் விபரங்கள் இருந்தால் அதனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் அவ்வாறு தகவல் கொடுப்பவர்களின் பெயர் மற்றும் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என ஆய்வாளர் சிவக்குமார் கூறினார்.
இந்த கூட்டத்தில் லாரி உரிமையாளர்கள் அலுவலர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.