பாபநாசம் செய்தியாளர்ஆர் .தீனதயாளன்
பாபநாசம் உச்சி மகாகாளியம்மன் ஆலய ஆடித்திருவிழா திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு செய்தனர்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேருராட்சி பெரியார் நகர் ரயிலடி தெருவில் அமைந்திருக்கும் கருப்புசாமி, மதுரை வீரன் ,சந்தன காளியம்மன், உச்சி மகா காளியம்மன் ஆலய ஆடித்திருவிழாவை முன்னிட்டு பாபநாசம் குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
அதனைதொடர்ந்து கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.