அகில பாரத மக்கள் கட்சியின் பல்வேறு பகுதி மண்டல் அலுவலகங்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திறக்கப்பட்டு வருகின்றன..
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் மண்டல் சார்பாக,கே கே புதூர் 6 வது வீதி சாய்பாபா காலனியில் அகில பாரத மக்கள் கட்சியின் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
இதில் புதிய மண்டல் அலுவலகத்தை அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எஸ்.ராமநாதன் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் இளந்தென்றல் சிவா மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் மாவட்டசெய்தி தொடர்பாளர் நாகராஜ் வடவள்ளி மண்டல தலைவர் வீரம் வினோத் மாவட்ட பொறுப்பாளர் சீதாராமன் கோவை மாவட்ட மகளிர் அணி செயலாளர் .கோமதி மற்றும் நிர்வாகிகள் சம்பத்குமார் வினோத் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்