மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி இன இளம்பெண்கள் இருவரை நிர்வாணப்படுத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து மன்னார்குடியில் தனியார் கல்லூரி மாணவிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மணிப்பூரில் தொடர்ந்து நடைபெற்று வரும் கலவரத்தை உடனடியாக தடுத்து நிறுத்திடவும், மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி இன இளம்பெண்கள் இருவரை நிர்வாணப்படுத்தப்பட்டு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க கோரியும், இனப்படுகொலைக்குக் காரணமான மணிப்பூர் மாநில முதலமைச்சர் நாங்தோம்பம் பிரேன்சிங்கை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் , மாணவர் அமைப்பினர் , கல்லூரி மாணவ மாணவியர்கள், வழக்கறிஞர்கள் , மாதர் சங்கம் , மகளிரணியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தனியார் கல்லூரி மாணவிகள் சுமார் 600 க்கும் மேற்பட்டோர் கல்லூரி வாயில் முன்பு மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.