நெய்வேலி என்எல்சி சம்பவத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பரமத்திவேலூர் அண்ணா சிலை அருகே பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் பெண்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்திர்க்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று காலை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. என்எல்சி நிறுவனத்தின் பிரதான நுழைவாயில் முன்பு பாமக வினர் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமக., தலைவர் அன்புமணி ராமதாஸை போலீசார் கைது செய்தனர். இதனைக் கண்டிக் வகையில் தமிழகம் முழுவதும் பாமக வீனர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் அண்ணா சிலை அருகே நாமக்கல் மத்திய மாவட்ட பாமக செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், மாவட்ட தலைவர் தினேஷ்குமார் ஆகியோர் தலைமையிலும் பரமத்தி வேலூர் நகர செயலாளர் ஆட்டோ கணேஷ் மற்றும் நகர தலைவர் அனிச்சை விஜி மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் அன்புமணி ராமதாசை கைது செய்ததை கண்டித்தும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் காவல்துறை, தமிழக அரசு மற்றும் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எனுப்பினர். இந்த ஆர்பாட்டத்தில் பெண்கள் உட்பட எழுபதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்றது.