மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்
மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 53 தாய்மார்களுக்கு தல 1000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை சிங்கப்பூர் பரம சாந்தி அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது .
திருவவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிரசவ வார்டில் பிறந்த குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் தாயாருக்கு சிங்கப்பூர் பரம சாந்தி அமைப்பின் சார்பில் 53 பேர்களுக்கு தலா 1000 ரூபாய் மதிப்பிலான பாய் , பெட்ஷீட், குழந்தைகளுக்கான உடைகள் மற்றும் ரூ 1,000 ரொக்க பணம் ஆகியவை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மன்னார்குடி ஒன்றிய குழு தலைவர் மனோகரன் மன்னார்குடி நகராட்சி தலைவர் சோழராஜன் தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர்கள் விஜயகுமார் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் சிங்கப்பூர் பரம சாந்தி அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர் .