பாபநாசம் செய்தியாளர்
ஆர் .தீனதயாளன்
பாபநாசம் அருகே ஸ்ரீ காளியம்மன் ஆலயம் 19-ஆம் ஆண்டு திருவிழா..
திரளான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சோலைப்பூஞ்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் ஆலயம் 19-ஆம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது. அதனையொட்டி சுல்லான் ஆற்றங்கரையில் இருந்து மேள தாளங்கள் முழங்க, பக்தர்கள் பால்குடம் காவடி முளைபாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்