நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரத்தில் ஈசன் வள்ளி கும்மி மற்றும் கொங்கு ஒயிலாட்டம் அரங்கேற்ற விழா.
500 க்கும் மேற்ப்பட்ட சிறுமியர், சிறுவர்
பெண்கள், ஆண்கள் பங்கேற்றனர்.
இந்த கொங்குநாட்டின் பிரதான கலையான வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற விழா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடுத்த எர்ணாபுரத்தில் தீரன் திடலில் இன்று இரவு நடைபெற்றது
இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியை கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் மாநில தலைவர் ஆர். தேவராசன் கலந்து கொண்டு துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
கொங்கு நாட்டின் பராம்பரிய மற்றும் கலாச்சார கலையான இந்த ஈசன் வள்ளி கும்மி மற்றும் கொங்கு ஒயிலாட்டம் குழுவை திறம்பட நடத்தி வரும் ஆசிரியர்கள் கொங்கு ரவி மற்றும் மேகநாதன் குழுவினருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி செயலாளர் கே. ரவிச்சந்திரன், வழக்கறிஞர் இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எர்ணாபுரம் ஸ்ரீ.மாரியம்மன் கோவிலில் இருந்து ஈசன் வள்ளி கும்மி ஒயிலாட்ட குழுவினர் முளைப்பாலிகையை ஏந்தி ,மேளதாளத்துடன், குதிரையில் தீரன் சின்னமலை வேடமணிந்த சிறுவர்களுடன் ஈசன் வள்ளி கும்மி ஒயிலாட்டம்
நடக்கும் திடலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
ஈசன் வள்ளி கும்மி மற்றும் ஒயிலாட்ட நிகழ்ச்சியில் நாமக்கல் – கரூர்- சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த ஈசன் வள்ளி கும்மி ஒயிலாட்ட குழுவினரும் மற்றும் சிறுவர்கள் பெரியோர்கள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியானது கொங்கு மண்டலத்தை சேர்ந்த சிறுவர், சிறுமிகளுக்கு ஒயிலாட்டத்தின் சிறப்பும், கும்மியின் சிறப்பும் குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.
மேலும் தமிழ் கடவுளான முருக கடவுளின் வரலாற்றையும் முருகனின் குழந்தை பருவத்தையும், முருகனின் வள்ளி – தெய்வானை திருமண கதைகளையும் விளக்கமாக எடுத்துரைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது
ஆசிரியர் ரவி மற்றும் மேகநாதன் ஆகியோர் இக் குழுவினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
ஈசன் வள்ளி கும்மி ஒயிலாட்டம் அரங்கேற்ற விழா ஏற்பாடுகளை எர்ணாபுரம் வழக்கறிஞர் சிவகுமார், நீலியங்காட்டுபுதூர் , தீரன் நற்பணி மன்றம் எர்ணாபுரம் பெரிய அய்யம்பாளையம் ஊர் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து செய்து இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியை 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்தனர்