சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பத்திற்கும் மேற்பட்ட வனச்சரக்கங்களில் ஏராளமான உயிரினங்கள் வசித்து வருகின்றன இதில் சிறுத்தை மான் யானை போன்ற பல்வேறு உயிரினங்கள் வசித்து வருகின்றன

இந்த நிலையில் பவானிசாகர் அடுத்த தெங்குமரடா செல்லும் வழியில் கொத்தமங்கலம் வனச்சரகத்திற்க்கு உட்பட்ட கொமரத்தூர் வனப்பகுதியில் ஓடையில் 6 வயது மதிக்கத்தக்க ஆண் புலி இறந்த 10 நாட்கள் ஆன நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டு உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டு வனப்பகுதியில் உடல் எரியூட்டப்பட்டது.

இந்த நிலையில் உடற்கூறு ஆய்வின் முடிவில் புலி வனப்பகுதியில் மான்கள் மற்றும் பன்னிகளை வேட்டையாட வைத்துள்ள இரும்பு கம்பியால் ஆன கன்னியில் புலி மாட்டியுள்ளதாகவும் கடந்த 10 நாட்களாக அதிலிருந்து வெளியே தப்பிக்க முடியாமல் உணவில்லாமல் இருந்ததால் புலி இறந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர் அப்பொழுது வனப்பகுதியில் அத்துமீறி இரும்பு வளையங்களால் ஆன கன்னிகள் வைக்கப்பட்டுள்ளது

இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சுசில் குட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ் நாச்சிமுத்து பத்மகுமார் திவின்குமார் லோகேஷ் பால் தினகரன் சௌந்தர்ராஜன் ஆகியோர் வனப்பகுதிகளில் பன்றிகள் மற்றும் மான்களை வேட்டையாட அவ்வப்போது இரும்பு கம்பியால் ஆன கன்னிகளை வைத்து வந்தது தெரிய வந்தது இவர்கள் வைத்த கன்னியில் புலி சிக்கிக் கொண்டு இருந்ததால் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வனத்துறையினர் சிறையில் அடைத்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *