எஸ். செல்வகுமார் செய்தியாளர்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் ஆவணி மாத பிறப்பை ஒட்டி சிறப்பு பூஜை வழிபாடு. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் தமிழ் ஆவணி மாத பிறப்பை ஒட்டி சிறப்பு கோபூஜை, வழிபாடு நடந்தது. முன்னதாக கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து கோசாலையில் இருந்து வரவழைக்கப்பட்ட புங்கனூர் குட்டை பசுமாடு கன்றுக்கு சிறப்பு வழிபாடு செய்து வஸ்திரம் சாத்தி தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பசு மாடு மற்றும் கன்றினை வலம் வந்து மலர் தூவி வழிபாடு செய்தனர்.

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் ஆவணி மாத பிறப்பை ஒட்டி சிறப்பு பூஜை வழிபாடு. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் தமிழ் ஆவணி மாத பிறப்பை ஒட்டி சிறப்பு கோபூஜை, வழிபாடு நடந்தது. முன்னதாக கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து கோசாலையில் இருந்து வரவழைக்கப்பட்ட புங்கனூர் குட்டை பசுமாடு கன்றுக்கு சிறப்பு வழிபாடு செய்து வஸ்திரம் சாத்தி தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பசு மாடு மற்றும் கன்றினை வலம் வந்து மலர் தூவி வழிபாடு செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *