திருவள்ளூர்
சேலியம்பேடு ஊராட்சியில் உள்ள பள்ளிபாளையம் அங்காள பரமே ஸ்வரி ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது. சேலியம்பேடு ஊராட்சி இந்த ஊராட்சியில் பள்ளிபாளையம் கிராமம் இந்தப் பகுதியில் புகழ் பெற்ற சக்தி வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் தற்போது புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபி ஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து கடந்த இரு தினங் களாக பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன பின்னர் நேற்று காலை 9 மணிக்கு மேல் 10 மணி க்குள்ளாக மகா கும்பாபிஷேகம் நடத்தி பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதில் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர் பின்னர் முக்கிய பிரமுகர்களுக்கு அங்காள பரமேஸ்வரி ஆலய கலச ங்கள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது.