பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாம் அருகே மெலட்டூர் மாணிக்க விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்..
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மெலட்டூர் அடிச்சேரிதெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மாணிக்க விநாயகர் கோயில் திருப்பணி அறங்காவலர் பாலசுப்ரமணியன் குடும்பத்தினர் மற்றும் கிராமவாசிகள் உதவியால் நிறைவுற்ற நிலையில், மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு நான்கு கால யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து புனித நீர் கலசத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மூலவர் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விநாயகர் சன்னதியில் பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.