தேசிய அளவிலான வூசு போட்டியில் கோவை மாணவிகள் பதக்கங்கள் குவித்து சாதனை…
பீகாரில் நடைபெற்ற தேசிய அளவிலான வூசு சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவ,மாணவிகள் பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளனர்…
கோவையை சேர்ந்த பள்ளி,மாணவிகள், வேத ஸ்ருதி,பவதாரிணி,பாலஹர்சனி,லட்சுமி பிரபா,மாணவர்கள் ஆகாஷ்,அபிசாய் ஜெரோன் ஆகியோர் திண்டிவனத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வூசு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், அண்மையில் பீகாரில் நடைபெற்ற 22 வது தேசிய ஜூனியர் போட்டிகளில் கலந்து கொண்டனர்..
தேசிய அளவில் நடைபெற்ற இதில்,மகாராஷ்டிரா,பஞ்சாப்,உத்தரபிரதேசம்,கேரளா,கர்நாடாகா,ஆந்திரா என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சான்குவாங்,ஜியான்சு,குன்சு,நான்குவாங்,நன்குன்,நந்தாவ்,வின்சுங்,தாய்ச்சி என பல்வேறு பிரிவுகளாகவும் மேலும் குழு போட்டிகளும் நடைபெற்றன.
இதில் கலந்து கொண்ட மாணவி வேத ஸ்ருதி தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கமும் மற்ற மாணவ,மாணவிகள் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.
இந்நிலையில் கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு வூசு சங்கத்தின் தலைவர் அலெக்ஸ் அப்பாவு வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து செயலாளர் ஜான்சன்,மற்றும் நிர்வாகிகள் செல்வராஜ்,கணேசன்,ராஜன் ஆகியோர் மாணவ,மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்..
இதே போல புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான சீனியர் வூசு போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற கல்லூரி மாணவ, மாணவிகளான வெர்ஜின்,அகல்யா,முத்துராஜ பாரதி,முத்து அகில் அரசு ஆகியோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்..வெற்றி பெற்ற அனைவரும் அடுத்து நடைபெற உள்ள சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடதக்கது…