தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் கீழ வீராணம் ஊராட்சிக்குட்பட்ட வீராணம் ஏந்தலூர், நாச்சியார்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது
அதன் ஒருபகுதியாக கீழ வீராணம் ஊராட்சியில் ஆலங்குளம் ஒன்றிய தொடக்க பள்ளியில் முதல்வரின் சிற்றுண்டி
காலை உணவு திட்டம் துவக்க விழா பள்ளி தலைமை ஆசிரியர் கோமதி, தலைமையில் நடைப் பெற்றது.
கீழ வீராணம் ஊராட்சி மன்ற தலைவர் அ.வீரபாண்டியன்
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல்வரின் சிற்றுண்டி காலை உணவு திட்டத்தை தொடங்கிவைத்தார்.
நிகழ்வில் சத்துணவு அமைப்பாளர் சந்தி, உதவியாளர் துரைச்சி, உமா, மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.