எஸ். செல்வகுமார் செய்தியாளர்

சீர்காழியில் மாநில அளவிலான மின்னொளி கிரிக்கெட் போட்டி.நெய்வேலி அணி வெற்றி.

சீர்காழியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நெய்வேலி அணி வெற்றி பெற்று முதல்பரிசுதொகை மற்றும் கோப்பையை வென்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி எல்.எம்.சி விளையாட்டு மைதானத்தில் அசோக்ராஜ்}மேனாதேவி கிரிக்கெட் கிளப் சார்பில் 2}ஆம் ஆண்டு மாநில அளவிலான இரவு,பகல் மின்னொளி கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்றது. போட்டியினை சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் , காவல்ஆய்வாளர் சிவக்குமார், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் அறிவுசெல்வன், துணை அமைப்பாளர் ஜெ.கே.செந்தில் தொடங்கிவைத்தனர்.

இந்த போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 40 அணிகள் பங்கேற்று விளையாடினர். இதன் இறுதிபோட்டியினை சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார். இறுதி போட்டியில் நெய்வேலி அணியும்,பழையபாளையம் அணியும் மோதினர்.இதில் நெய்வேலி அணி வெற்றிபெற்றது.

முதலிடம்பெற்ற நெய்வேலி அணிக்கு ரூ.40ஆயிரம் பரிசுதொகையும்,கோப்பையும் வழங்கப்பட்டது.இரண்டாம் இடம்பெற்ற பழைபாளையம் அணிக்கு ரூ.30ஆயிரமும்,மூன்றாம் இடம் பெற்ற அசோக்ராஜ்}மேனாதேவி அணிக்கு ரூ.20ஆயிரமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விகாஸ்,ஹரியந்த் மற்றும் குழுவினர்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *