எஸ்.செல்வகுமார். செய்தியாளர்
சீர்காழியில் அதிகாலையில் பெட்ரோல் பங்கில் பேட்டரிகள் திருடி தோல் பட்டையில் வைத்து தூக்கிச் சென்ற நபர்கள். சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து பிடித்த போலீசார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சிதம்பரம் செல்லும் நெடுஞ்சாலையில் விளந்திட சமுத்திரம் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு வைத்திருந்த பேட்டரிகளை பங்க பூட்டியிருந்த சமயத்தில் அதிகாலை 2 நபர்கள் திருடி சென்றனர்.
இது குறித்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அதில் இரண்டு நபர்கள் பேட்டரிகளை திருடி அதனை தோல் பட்டையில் வைத்துக்கொண்டு தூக்கி செல்வது தெரிந்தது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை செய்ததில் பேட்டரிகளை திருடி சென்றவர்கள் சீர்காழி அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த முத்து மற்றும் விளந்திட சமுத்திரம் பகுதியை சேர்ந்த இலக்கியன் என்பது தெரிந்தது உடனடியாக அவர்களை மடக்கிப்பிடித்த போலீசார் திருடிச் சென்ற பேட்டரிகளையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
வழக்குப்பதிவு செய்து திருட்டு நபர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர். பேட்டரிகளை திருடி தொலில் வைத்து தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.