மேட்டுப்பாளையம் செய்தியாளர் சத்தியமூர்த்தி

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் கோவை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு கோவை வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் M.A.R.K. ஹக்கீம் தலைமையில் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கும் சமத்துவ விருந்து நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தி.முகழக துணை பொதுச்செயலாளரும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ அருண்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆர்.சண்முக சுந்தரம், அஷ்ரப்ஃஅலி,காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம்,மேட்டுப்பாளையம் நகரமன்ற தலைவர்திருமதி மெஹரிபா பர்வீன்,துணைத் தலைவர் திருமதி.அருள் வடிவு,சிறுமுகை பேரூர் கழக செயலாளர்
உதயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *