எஸ்.செல்வகுமார் செய்தியாளர்
சீர்காழி அருகே சின்ன பெருந்தோட்டம் கிராமத்தில் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு ஐந்தாயிரம் பனை விதைகளை விதைத்த இளைஞர்கள்.கடல் நீர் உட்புகுவதை தடுக்க இளைஞர் மேற்கொண்ட செயலை பாராட்டும் கிராம மக்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சின்னப்பெருந்தோட்டம் கிராமம் அமைந்துள்ளது.இந்த கிராமம் கடற்கரைக்கு அருகாமையிலேயே உள்ளதால். உப்பனாற்றின் வழியே கடல் நீர் உட்புகுந்து விவசாய நிலங்கள் உவர்நிலமாக மாறி விவசாயம் பொய்த்து போனது.
கிராம மக்களில் நீண்ட கால கோரிக்கைக்கு பிறகு தற்போது கடல்நீர் உட்புகாதவாறு ஆற்றின் கரை படபடுத்தப்பட்டு தடுப்புகரை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பு கரையை மண் அறிப்பிலிருந்து பாதுகாத்து, பலப்படுத்தும் நோக்கத்தோடு சின்னபெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றினைந்து பனை விதைகள் நடவு செய்ய முடிவு செய்தனர். அதன்படி பல்வேறு பகுதிகளில் அலைந்து திரிந்து 5000 க்கும் மேற்பட்ட பனை விதைகளை சேகரித்து நடவு பணியை துவங்கியுள்ளனர்.
தடுப்பு கரையில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு ஐந்தாயிரம் பனை விதைகளை கிராம மக்களுடன் இணைந்து இளைஞர்கள் நடவு செய்து வருகின்றனர்.இதன்மூலம் ஆற்றங்கரையில் அரிப்பு ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, கடல் நீர் உட்புகுவதும் தடுக்கப்படும் என இளைஞர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இளைஞர்களின் இச் செயலை அப்பகுதி கிராமமக்கள் பாராட்டி வருகின்றனர்.