வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன்ஆலயத்தில் தூய்மை பணி நடைப்பெற்றது.
தமிழகத்தில் முதல்வர்மு. க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர்,இந்துசமய அறநிலைத்துறையில் கடந்த 2ஆண்டுகளில் மட்டும் மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைப்பெற்றுள்ளது.
இது மட்டுமின்றி கோயில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் கோயில்களை அனைத்து இடங்களிலும்
சுத்தம் செய்ய வேண்டும் என, இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுஉத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இந்துசமய அறநிலைத்துறை நாகை
இணை ஆணையர் குமரேசன், உதவி ஆணையர் (பொ) ராணி ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில்
அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களை அந்தந்த
கோயில் செயல் அலுவலர்கள் மூலம் ஊழியர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் ஆலயத்தில் நேற்று செயல் அலுவலர்
ஆ. ரமேஷ் மேற்பார்வையில் கோயில் பணியாளர்கள்
தூய்மை பணியில் ஈடுப்பட்டனர்.