ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்


நன்னிலம் வட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் .தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நன்னிலம் வட்டம், பனங்குடி ஊராட்சியில் ரூ.33.72 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளதையும், அப்பள்ளியில் தமிழக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு அளிக்கப்பட்டுவருவதையும், அப்பள்ளி சமையற்கூடத்தினையும், முடிகொண்டான் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.37.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தினையும், பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.643.85 லட்சம் மதிப்பீட்டில் 5660 மீ. திருமலைராஜன் பாலம் – செருவளூர் வரை சாலை அமைக்கப்பட்டுவருவதையும், பூந்தோட்டம் பகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்கள் குறித்து சரிபார்ப்பு பணி நடைபெற்று வருவதையும் திருமியச்சூர் பெரிய குளம் தூர்வாரப்பட்டுள்ளதையும், திருமியச்சூரில் கட்டப்பட்டுவரும் நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடத்தினையும், போழக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை கட்டடங்களில் ஏற்பட்ட பழுதுகளை சரிசெய்யப்பட்டுள்ளதையும், அப்பள்ளி சமையற்கூடத்தினையும், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிளெவர் பிளாக் சாலையினையும், போழக்குடி பகுதியிலுள்ள. பெரிய குளம் தூர்வாரப்பட்டுள்ளதையும், மேலும், ஊராட்சியில் பிரதமர் மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுவரும் வீடுகளையும், சிறுபுலியூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற கட்டடம் 42.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவருவதையும் மாவட்ட ஆட்சியர்தி.சாருஸ்ரீநேரில் பார்வையிட்டு ஆய்வு மேறகொண்டு வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடிந்திட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்கள்
முன்னதாக, நன்னிலம் வட்டம், பனங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை வழிபாட்டில் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கலந்துகொண்டு மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
ஆய்வில், நன்னிலம் வட்டாட்சியர் ஜெகதீசன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானகிருஷ்ணரமேஷ், .ராஜ்குமார், பனங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முரளி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *