எஸ்.செல்வகுமார். செய்தியாளர்

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் 5 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி. பேரூராட்சி நிர்வாகம் முன்பு இருந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட நகர் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை புங்கனூர் செல்லும் சாலையில் உள்ள திடக்கழிவு பூங்காவில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து மண்புழு உரங்களும் கம்போஸ்ட் உரங்கள் தயாரிக்கப்பட்டு வந்தது இங்கு சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி விற்பனை செய்யப்பட்டு வந்தது

ஆனால் தற்பொழுது திடக்கழிவு பூங்காவுக்கு அருகாமையிலே பேரூராட்சி நிர்வாகம் சொந்தமாக விளைநிலத்தை வாங்கி பள்ளம் தோண்டி நகரப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி வருகிறது

அவ்வப்போது மாலை நேரங்களில் இந்த குப்பைகளை தீயிட்டு கொளுத்தி வருகின்றனர் இதனால் அருகே உள்ள பேரூராட்சிக்கு உட்பட்ட மேல் பாதி மருவத்தூர் காந்திநகர் மற்றும் ஊராட்சி பகுதியான மல்லுக்குடி பட்டாக்கால் புங்கனூர் பகுதிகளில் எரிக்கப்படும் குப்பைகளின் வரும் புகை சூழ்வதால் மூச்சு திணறல் ஏற்படுவதாகும் துர்நாற்றம் வீசுவதாகவும் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரம் தயாரிக்கவும் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *