ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூரில் காந்தி ஜெயந்தி நினைவு நாளை முன்னிட்டு மாநில அளவிலான யோகா போட்டி காந்தி ஜெயந்தியினை முன்னிட்டு அக்டோபர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டியினை Feet of Fire அகாடமி நடத்திய சோழ தேச கோப்பை யோகா போட்டியினை திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், திருப்பூர், சென்னை உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு திருவாரூர் மாவட்டத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் தமிழக பால்வளத்துறை அமைச்சருமாகிய ஆதிதிராவிடர் மற்றும் தமிழக வீட்டு வாரிய மேம்பாட்டு கழகத் தலைவர் உ.மதிவாணன் அவர்கள் தலைமை தாங்கினார்.

திமுக நகர கழக செயலாளர் வாரை பிரகாஷ் முன்னிலை வகித்தார். மற்றும் திருவாரூர் நகரமன்ற உறுப்பினர்கள் ரஜினிசின்னா, வரதராஜன் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர். இவர்களை கஸ்தூர்பா காந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சந்திரமுருகப்பன், செயலர் இன்பராஜ், மேலாளர் சின்னராஜ்முதல்வர் மலர்விழிஇன்பராஜ், Feet of Fire அகாடமியை சேர்ந்த இந்துமதிஅரவிந்த் ஆகியோர் வரவேற்றனர்.

இந்நிகழ்வில் பேசிய முன்னாள் பால்வளத்துறை அமைச்சரும், முன்னாள் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான ஆதிதிராவிடர் மற்றும் தமிழக வீட்டு வசதி கழக வாரிய மேம்பாட்டு கழக தலைவர் யோகா என்பதை உடலும் மனமும் ஒன்றினைவது என்பதை அனைவரும் அறிவீர்கள் இருப்பினும் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் யோகா செய்தவர் என்றும் அனைவரையும் யோகா செய்ய ஊக்குவிப்பவர் என்றும் கூறினார்.

மேலும் மனக்கட்டுப்பாட்டையும், ஒழுங்கு நெறிமுறைகளையும் உண்டாக்கும் யோகாவினை அனைவரும் கட்டாயம் செய்வது அவசியம் என்று கூறினார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் Feet of Fire நிறுவனர்கள் ஈ.பகுத்தறிவு மற்றும் மாஸ்டர் ம.அரவிந்த் ஆகியோனர் நன்றி தெரிவித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *