மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் அன்னை முதியோர் இல்லத்தில் நிர்வாகி சந்திரா தலைமையில் உலக முதியோர் தின விழா நடைபெற்றது.

முதியோர் தினத்தை முன்னிட்டு
ஓடந்துறை, காந்தி நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் ரோஜா பூ மற்றும் இனிப்புகளை முதியோர்களுக்கு வழங்கி ஆசி பெற்றனர். முதியோர்கள் பள்ளி மாணவர்களுக்கு நினைவுப் பரிசாக புத்தகங்களை வழங்கினர்.

பள்ளி மாணவன் ஆகாஷ் மூத்த குடிமக்கள் முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

தலைமை ஆசிரியர் புனித செல்வி , ஆசிரியர் .உமா,துரைப்பாண்டியன், ஓய்வு பெற்ற துப்புரவு ஆய்வாளர் மணி, ஆசிரியர் முத்து சங்கையா,அரிமா.ஜெயராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்..

மேசா, உள்பட ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிறைவாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு.ஜெயராமன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *