கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது அதேபோல நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால் சுமார் 3.30, மணியளவில் வால்பாறை அண்ணா நகர் முத்துமாரியம்மன் கோவில் அருகே குடியிருந்து வரும் அமுதா என்பவரின் வீடு இடிந்து விழுந்ததில் அருகே உள்ள ஆறுமுகம் என்பவரின் வீடும் பலத்த சேதமடைந்தது திடீரென ஏற்பட்ட இச்சம்பவத்தால் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அலறியடித்து வெளியேறியதால் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது