வால்பாறை அண்ணா நகர் பகுதியில் மழையால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு நிவாரண உதவி வழங்கிய நகரச்செயலாளர் சுதாகர்
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பத்தாவது வார்டு அண்ணா நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நேற்று நள்ளிரவு சுமார் 3.30 மணியளவில் அமுதா என்பவரின் வீடு இடிந்து விழுந்ததில் அருகே உள்ள பெயிண்டர் ஆறுமுகம் என்பவரின் வீடும் சேதமடைந்தது தகவலறிந்த வால்பாறை நகர கழக செயலாளர் ஆ.சுதாகர் அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஆறுதல் கூறி காய்கறி, அரிசி மற்றும் நிவாரணத் தொகை வழங்கினார்
அப்போது நகர துணை செயலாளர் சரவணபாண்டியன்,பத்தாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் காமாட்சி கணேசன்,தலைமை செயற்குழு உறுப்பினர் கோழிக்கடை கணேசன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சத்தியமூர்த்தி, நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜெயராம் என்கிற கிருஷ்ணமூர்த்தி, தமிழ் செல்வன், தேவராஜ், சதாசிவம், குல்லி என்கிற சதீஸ் மற்றும் பலர் உடனிருந்தனர்