மாற்றம் தந்த மாமனிதர்” என்று மக்களால் அழைக்கப்படும், பி. எஸ். சீனிவாச ராவ் அவர்களின் 62- ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி வலங்கைமான் ஒன்றியம் முழுவதும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடி ,விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்க கொடிகளை ஏற்றி, அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் “மாற்றம் தந்த மாமனிதர்” என்று மக்களால் அழைக்கப்படும் பி. எஸ். சீனிவாச ராவ் அவர்களின் 62 -ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி வலங்கைமான் ஒன்றிய முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர்சங்க கொடி, தமிழ்நாடு விவசாய சங்க கொடி ஆகியவற்றை ஏற்றி வைத்து, பி.எஸ். சீனிவாச ராவ் அவர்கள், திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பி. சின்னராஜா,தலைவர் எம். கலியபெருமாள், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ரவி, ஒன்றிய குழு எம். கண்ணையன், கொட்டையூர் கிளை செயலாளர் கே .எஸ். விஜயகுமார், நார்த்தங்குடி பி.ராஜேந்திரன், பைத்தஞ்சேரி செயலாளர் ரமேஷ், ஒன்றிய குழு ஜீவானந்தம், அரையூர் கிளை செயலாளர் எஸ். சண்முகம், நரிக்குடி கிளை செயலாளர் தேசிங்கு, ஒன்றிய குழு வேம்பையன், கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட குழு எஸ்.பி. செல்வகுமார் மற்றும் அனைத்து கிளை செயலாளர்கள், பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கு பெற்றனர்.

கொட்டையூர் கிளையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் எஸ் எம் செந்தில்குமார் கட்சிகொடி ஏற்றினார், பைக்கஞ்சேரி கிளையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ரவி கொடியேற்றினார். இதுபோன்று ஒன்றியம் முழுவதும் கட்சி, சங்க கொடிகள் ஏற்றப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *