நௌசாத்
செய்தியாளர்,நீலகிரி மாவட்டம்.

இஸ்லாமியரின் இறை தூதராக கருதப்படும் முகமது நபியின் 1498 ஆம் பிறந்த நாள் விழா கடந்த வியாழக்கிழமை (28.08.2023)அன்று கடைப் பிடிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக மேல் கூடலூர் நூருல் இஸ்லாம் மஸ்ஜித் மற்றும் மதரசா கமிட்டியின் சார்பாக மீலாது நபி ஊர்வலம் மிக சிறப்பாக நடைப்பெற்றது.

இதில் இஸ்லாமிய மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் (30.09.2023 ஞாயிற்றுக்கிழமை)ஒவ்வொரு வீதியாக நடைப்பயணத்துடன் நடைப்பெற்று மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
. இதில் பல பகுதிகளில் இருந்தும் இஸ்லாமிய சகோதரர்கள் கலந்து கொண்டு சாதி மதம் பாராமல் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியினை பரிமாறிகொண்டனர்.

கொடியேற்றத்துடன் நடைப்பெற்ற இவ்விழாவிற்கு மஸ்ஜித்கமிட்டிதலைவர்பஷீர்கொடியேற்றினார்,தலைமை இமாம் அன்வர் பாகவி ஊர்வலத்திற்கு தலைமை வகித்து மத சொற்பொழிவு நிகழ்த்தினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *