பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்.
பாபநாசம் பகுதிகளில் சாலை இரு ஓரங்களில் கொட்டப்பட்ட தார் கப்பிகளால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதி …..
உடனடியாக அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை ….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதிகளில் தஞ்சாவூர் – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புதிய தார் சாலைகள் போடுவதற்காக ஏற்கனவே உள்ள தார் சாலை கப்பிகளை வெட்டப்பட்டு சாலையின் இரு ஓரங்களிலும் கொட்டப்பட்டுள்ளது.
பாபநாசம் சாலை மிகவும் குறுகிய பகுதியாகும் இச்சாலையின் வழியாக செல்கின்ற வாகன ஓட்டிக்களும் , பாதசாரிகளும் ,பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இந்நிலையில் அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்படுகின்றது எனவே சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறையின் அதிகாரிகள் புதிய சாலை அமைக்கும் போது ஏற்கனவே சாலை இரு ஓரங்களில் கொட்டப்பட்ட தார் கப்பிகளை உடனடியாக அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.