பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் பெனிபிட் பண்ட் லிமிடெட் 29 ஆம் ஆண்டு மகாசபை கூட்டம் ….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பெனிபிட் பண்ட் லிமிடெட் 29 ஆம் ஆண்டு மகாசபை கூட்டம் நடைபெற்றது பாபநாசம் கிளை மேலாளர் யேசுதாஸ் அறிவழகன் வரவேற்றுப் பேசினார்.

பாபநாசம் பெனிபிட் பண்ட் லிமிடெட் தலைவரும் நிர்வாக இயக்குனருமான ஆறுமுகம் தலைமை வகித்து 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான இருப்பு நிலை குறிப்புஆண்டறிக்கை வாசித்தார்.

பூண்டி புஷ்பம் கல்லூரி ஓய்வு பெற்ற முதல்வர் ராஜேந்திரன் தீர்மானங்களை வாசித்து வாடிக்கையாளர்களின் ஒப்புதலை நிறைவேற்றினார்.

விழாவில் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற பாபநாசம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ் மற்றும்
2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற 17 மாணவ மாணவிகளுக்கும் 157 மூத்த உறுப்பினர்களுக்கும் பொன்னாடை அணிவித்து பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் பாபநாசம் பென்சனர் சங்கத் தலைவர் சுப்பு தங்கராசு,. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் செல்வராஜ், நல்லாசிரியர் கலைச்செல்வன் ,ஆடிட்டர் சண்முகம், இன்டர்நேஷனல் கார்ப்பரேட் வழக்கறிஞர் மகாராஜ், முன்னாள் தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குனர் குணசேகரன், ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் சிவகுமார் , செயல் இயக்குனர்வல்வில் ஓரி பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் வங்கி வாடிக்கையாளர் கலந்து கொண்டனர் முடிவில் கபிஸ்தலம் கிளை மேலாளர் அதியமான் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *