தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்.
ஜோ.லியோ.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கலை விழா போட்டிகள்.
தஞ்சாவூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு கலை விழா சார்பில் அனைத்து அரசு பள்ளி, தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் துவக்கி வைத்தார்.
கமலா சுப்ரமணியம் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற இந்த போட்டியில், மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா, ஓவிய போட்டி ஆகியவை நடைபெற்றது.
இந்த மாணவ, மாணவிகளுக்கான கலை விழா போட்டியில் முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், தனியார் பள்ளி டிஈஓ அமலா தங்கத்தாய், கமலா சுப்ரமணியம் பள்ளி தாளாளர் வள்ளியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் தெய்வ பாலன் மற்றும் ஜேக்கப், வினோத் ஆகியோர் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொண்டார்.