மனவெளி தொகுதிக்கு உட்பட்ட, தவளக்குப்பம் இளவரசன் நகர் முதல் சடா நகர் வரை, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தார் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக, ரூபாய் 18 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பீடு செய்து அப்பணியை தொடங்குவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

அரியாங்குப்பம் ஆணையர் ரமேஷ் மனவெளி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான, செல்வம் தலைமையேற்று, பூமி பூஜை செய்து, பணியை தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர்கள் அகிலன், சரஸ்வதி, சுரேஷ் மற்றும் பாஜக பிரமுகர் ஞானசேகர், தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், விவசாய அணி சக்தி பாலன், கூட்டுறவு சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி, செல்வி உள்ளிட்ட பலர். கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *