நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பல் மருத்துவக் கல்லூரியில் வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பல் மருத்துவக் கல்லூரியில் மாணவிகளுக்கு வெள்ளை அங்கி (ஒயிட் கோட்) அணிவிக்கும் விழா இனிதே நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் மு கருணாநிதி தலைமை தாங்கினார் மேலாண்மை இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
துணை மேலாண்மை இயக்குனர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீ ராகநிதி அர்த்தநாரீஸ்வரன், துணைத் தாளாளர் டாக்டர் கிருபாநிதி, இயக்குனர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, நிர்வாக இயக்குனர் டாக்டர் குப்புசாமி, தலைமை நிர்வாகிகள் சொக்கலிங்கம் மற்றும் வரதராஜு, அட்மிஷன் இயக்குநர் சௌண்டப்பன், டென்டல் மற்றும் பாராமெடிக்கல் இயக்குனர் டாக்டர் (கேப்டன்) கோகுலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விவேகானந்தா மகளிர் பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் நாகலட்சுமி வரவேற்புரை ஆற்றினார்.
கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் மு கருணாநிதி மாணவிகளுக்கு மருத்துவ சீருடைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்களே தங்களுடைய மகளுக்கு மருத்துவ சீருடையை அணிவித்து மகிழ்ந்தனர். டாக்டர் ப்ரீத்தி மாணவிகளுக்கு மருத்துவ உறுதி ஏற்பு நிகழ்ச்சியை நிகழ்த்தினார்.
இந்த விழாவில் விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் உறுப்பு கல்லூரிகளை சார்ந்த முதல்வர்கள், துறைத் தலைவர்கள், மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் தினேஷ் சங்கர் நன்றி உரையாற்றினார்.