கும்பகோனம் அரசு இன்ஜினி யரிங் காலேஜ் இயந்திரவியல் மற்றும் ஆட்டோமொபைல் துறையின் ஸ்டுடென்ட்ஸ் அசோசியேஷன் இந்த கல்வி ஆண்டிற்கான செயல்பாடுகள் தொடங்கப்பட்டது.
மேலும் இதன் தொடர்ச்சியாக மெக் டெக் ரிசர்ச் ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தும் 3-டி பிரின்டிங் இரண்டு நாள் பயிற்சி பட்டறை கல்லூரி முதல்வர் முனைவர். டி பாலமுருகன் அவர்களால் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்வி புலத்தலைவர் முனைவர்
எம் ருக்மாங்கதன், இயந்திரவியல் துறை தலைவர் முனைவர் சுந்தரசெல்வன் மற்றும் ஆட்டோமொபைல் துறை தலைவர் ஆர் ஜி பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இதற்கான ஏற்பாடுகளை இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் சி.கவியரசு, ஜிபி.சதீஷ்குமார் மற்றும் ஆர் விஜய் ஆகியோர் செய்திருந்தனர்.