நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கார் வியாபாரிகள் நல சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, பொதுக்குழு கூட்டம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நல கூட்டமைப்பின் மாநில தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாநில கூடுதல் செயலாளர் தனபால் வரவேற்புரை நிகழ்த்தினார் நாமக்கல் மாவட்ட கார் வியாபாரிகள் நல சங்கத்தின் மாவட்ட தலைவராக சுரேஷ், மாவட்ட செயலாளராக சிவா, மாவட்ட பொருளாளராக செல்வதுரை, இணை தலைவராக சிவசிப்பிரமணியன், துணை தலைவராக மணிகண்டன், துணை செயலாளராக ஆனந்த ராகவன், செய்தி தொடர்பாளராக பாரதிதாசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் புதிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துரை வழங்கினார்.

கூடுதல் நிகழ்வாக, நவம்பர் 19ம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் பேரமைப்பு தலைமை அலுவலக கட்டடத் திறப்புவிழா அழைப்பிதழை மாநில தலைவர் சிவக்குமார் முன்னிலையில் மாவட்ட தலைவர் சுரேஷிடம் பேரமைப்பு நிர்வாகிகள் வழங்கினர்.

விழா நிறைவில் பொருளாளர் செல்வதுரை நன்றி கூறினார்.

பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார், இணை செயலாளர் தேவி உதயக்குமார், இளைஞர் அணி அமைப்பாளர் மரக்கடை அருண்குமார், இணை செயலாளர் பிரபாகரன், கார் வியாபாரிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள், பல்வேறு மாவட்ட பொறுப்பாளர்கள், சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *