எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழியில் கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொள்ளும் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமானது நடைபெற்று வருகின்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் ரோட்டரி சங்கம் சீர்காழி டெம்பிள் டவுன் இணைந்து சீர்காழிக்கு அருகில் உள்ள சாந்தப்புத்தூர் கிராமத்தில் மயிலாடுதுறை கால்நடை பராமரிப்பு துறை சார்பாக 40க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் நிகழ்வு மற்றும் கால்நடைகளுக்கு அனைத்து வகையான மருத்துவ பரிசோதனை, விலையில்லா அனைத்து வகை மருந்துகளும் கால்நடை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தலைமையினை ரோட்டரி சங்கம் சீர்காழி டெம்பிள் டவுன் தலைவர் பி.கார்த்திகேயன், மேலும் மாவட்ட உதவி ஆளுநர் என்.கணேஷ், ரோட்டரி சங்கம் சீர்காழி டெம்பிள் டவுன் செயலர் டி.ரவி, பொருளாளர் பி.சந்தோஷ், முன்னாள் செயலர் எஸ். குமார், முன்னாள் செயலர் சி.பிரபாகரன், முன்னாள் தலைவர் எஸ்.கே.வைத்தியநாதன், ஆகியோர்கள் முன்னிலை வகிக்க ,நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சீர்காழி சுபம் வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் ஜி.சுதீஷ் ஜெயின் கலந்து கொண்டார்.

கால்நடை மருத்துவர்கள் டாக்டர்.இரமாபிரபா, டாக்டர்.சி.கார்த்திகேயன் , கால்நடை ஆய்வாளர் அ.ராஜீ, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் எம்.ராஜா, எம்.மாலதி ஆகியோர்கள் கலந்துகொண்டு அனைத்து கால்நடைகளுக்கு சிறப்பாக மருத்துவ பணியினை ஆற்றினர்.

இந்நிகழ்வில் சுபம் வித்யா மந்திர் பள்ளியின் முதல்வர் கே.வித்யா, பள்ளி நிர்வாக அலுவலர் சி.சண்முகம், மற்றும் ஏராளமான அனைத்து பகுதியிலிருந்தும் கிராம மக்கள், 30க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். நிறைவாக சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளியின் உதவி தலைமையாசிரியரும்,
நாட்டு நலப் பணித்திட்ட அலுவலருமான எஸ்.முரளிதரன் நிகழ்ச்சி ஏற்பாட்டினையும், நன்றி உரையினையும் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *