சென்னைதிருவொற்றியூரில் மணலி விரைவு சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் தீ பற்றி எரிந்த இரண்டு லாரிகள்

திருவொற்றியூர் அடுத்த மணலி விரைவு சாலையில் அதிகாலை சென்னை துறைமுகத்தை நோக்கி வந்தா கண்டைனர் லாரி சாலையில் ஓட்டுநர் இயற்கை உபாதை கழிப்பதற்காக சாலையின் ஓரமாக நிறுத்தி வைத்திருந்தார் வேகமாக வந்த மற்றொரு லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டைனர் லாரி மீது மோதியதில் தீ விபத்து ஏற்பட்டு இரண்டு வண்டிகளும் தீப்பிடித்து எறிய தொடங்கியது.

அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்உடனடியாக திருவொற்றியூர் எண்ணூர் மணலி மாதவரம் பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் லாரி ஓட்டுநர் சுந்தரமூர்த்தியை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மேலும் விபத்து தொடர்பாக சாத்தாங்காடு போலீசார் மற்றும் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *