பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே
அய்யம்பேட்டையில் சாலை பணிகள் விரைந்து முடிக்கப்படும். அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் சாலை மறியல் கைவிடப்பட்டது..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை மதகடி பஜார் முதல் பஸ் நிறுத்தம் வரை உடனே தார் சாலை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது பற்றி தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மங்கள பிரியா, அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மகாலெட்சுமி ஆகியோர் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் மாநில செயலாளர் உமாபதி, நகரச் செயலாளர் மாஸ்கோ, நகர தலைவர் மகாலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் இன்னும் மூன்று நாட்களில் மதகடி பஜார் முதல் பஸ் நிறுத்தம் வரை தார் சாலை அமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.