மதுரை
எல்@டி பைனான்ஸ் மற்றும் அக்சஸ் லைவ்லிஹுட்ஸ் ஃபவுண்டேஷன் இணைந்து, “டிஜிட்டல் சகி” திட்டத்தின் கீழ், மேலூர் தாலுகாவைச் சேர்ந்த கிராமப்புற பெண்கள் பயனடை
யும் வகையில், அக்டோபர் 16 ம் தேதி முதல் நவம்பர் 10 ம் தேதி வரை “பெண் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம்” விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மையம் புலனாய்வாளர் பாண்டியராஜா, வேளாண் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் உதவி வல்லுநர் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு கடனுதவி மானியம் பெறுவது குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு அளித்தனர். ஆறு பஞ்சாயத்தை சேர்ந்த 35 பெண் தொழில் முனைவோர்கள் மற்றும் 6 டிஜிட்டல் சகிக்கள் கலந்து கொண்டனர். மேலூர் தாலுகா டிஜிட்டல் சகி ஒருங்கிணைப்பாளர் செல்வி.சுஷ்மிதா, பயிற்சியாளர் சசிரேகா ஆகியோர் கலந்து கொண்டனர்