வலங்கைமானில் டி.சி.டி.யூ காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பாக, முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 39- வது நினைவு தினம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் டி.சி. டி யூ காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பாக முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 39- வது நினைவு தினத்தை முன்னிட்டு டி.சி.டி.யூ காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பாக, திருவாரூர் மாவட்டத் தலைவர் குலாம் மைதீன் தலைமையில், நகரத் தலைவர் அகமது மைதீன், காங்கிரஸ் முன்னாள் நகரத் தலைவர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், காங்கிரஸ் வட்டார செயலாளர் விஜயகாந்த் அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சிபிஐ கட்சியின் விவசாய பிரிவு ஒன்றிய செயலாளர் சின்னராஜா, திமுக ஒன்றிய துணை செயலாளர் சீனிவாசன், சிங்கராஜு இளைஞர் அணி ஜாகீர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *