திண்டிவனம் நகராட்சியில் தி.மு.க நகர மன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு . திண்டிவனம் நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன்
தலைமையில் நடைபெற்றது.
நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் மற்றும் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே, தி.மு.க., உறுப்பினர்களான பார்த்திபன், சின்னசாமி, ராம்குமார், லதா சாரங்கபாணி, ரம்யாராஜா, சதீஷ் ஆகியோர், நகராட் சிக்கு வரி வசூல் மூலம் கூடுதல் வருவாய் கிடைத்தும், வார்டுக ளுக்கு சாலை வசதி, குடிநீர் தேவைகள், மின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்ப வில்லை எனவும் மன்ற உறுப்பினர்களின்கோரிக்கைகளுக்கு காரிகள் அதி மதிப்பளிப்ப தில்லை எனக்கூறி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ஆணையாளர் முன்பு தி.மு.க., கவுன் சிலர்கள் 14 பேர் தரையில் அமர்ந்து தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க., நகர மன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது சிறிது நேரம் நகர மன்ற வளாகத்தில் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.