தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்.
ஜோ.லியோ
.

தஞ்சையை அடுத்த புறநகர் கிராம பகுதியான தளவாபாளையம் அதன் சுற்றுப் பகுதிகளை சார்ந்த மக்களின் புதிய பேருந்து வழித்தடம் வசதி வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வந்தது. இதனையடுத்து இக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி புதிய பேருந்து சேவை வசதி தொடங்கப்பட்டது,

தஞ்சையிலிருந்து சாரநாத் நகர், தைக்கால், தளவாபாளையம், மருங்கை, கத்திரிநத்தம், குளிச்சப்பட்டு பகுதி மக்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும் இந்த புதிய வழித்தடத்தால் பேருந்து வசதியை பயன்படுத்த, அந்த வழிதடத்தில் பேருந்து சேவையை மாநிலங்களவை உறுப்பினர் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சு.கல்யாணசுந்தரம் கொடி அசைத்து, இனிப்புகள் வழங்கி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் அம்மாபேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கே.வீ.கலைச்செல்வன், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் சுரேஷ், கத்தரிநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் வனமூர்த்தி, கும்பகோணம் அரசு போக்குவரத்து கோட்ட மேலாளர் பாலமுருகன், உதவி பொறியாளர் கருப்புசாமி கிராம மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *