பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் வழக்கறிஞர் சங்ககத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பாபநாசம் வழக்கறிஞர்கள் சங்கம் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக என். பாஸ்கரன், செயலாளராக ஜி. இளையராஜா,பொருளாளராக ஆர்.சங்கீதா ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
முன்னதாக வழக்கறிஞர் கண்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார். வழக்கறிஞர்கள் ஏன். சிவகுமார், வெற்றி செல்வன், ஜெயக்குமார், சரவணன் பாலச்சந்திரன், ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
வழக்கறிஞர்கள் செந்தில், வித்யா முருகவேல், உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் பொறுப்பேற்றுக் கொண்டவர்களை வாழ்த்தினார்.