பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை மெயின்ரோட்டில் சாலை பணிகளுக்காக தோண்டப்பட்டபோது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டும் , வீடுகளில் இருந்து வெளியேவர பொதுமக்கள் அவதி ….

பேரூராட்சி நிர்வாகம் , நெடுஞ்சாலைத்துறை
உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை………

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை மெயின்ரோட்டில் கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த தினங்களாக சாலை விரிவாக்க பணிகளுக்காக. பள்ளம் தோண்டப்பட்டு சாலை அமைப்பது வழக்கம் இந்நிலையில் தோண்டப்பட்ட பள்ளத்தின் பணிகளை விரைவில் முடிக்காமல் இருப்பதால் வீடுகளில்இருந்து கிராம மக்கள் வெளியே செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும், இதனால் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி போவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுக்கின்றனர்.

பள்ளி , கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளும், அன்றாட வேலைக்கு செல்வோர்களும் வீடுகளிலிருந்து செல்ல முடியாமல் தவிப்பதாகவும் கூறுகின்றனர்.

எனவே நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்படுத்தாமல் விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என வும்,

கிராம மக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *