வலங்கைமானில் காங்கிரஸ் தொழிற்சங்கம் டிசி டியு சார்பில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மாவட்ட தொழிற்சங்க டி. சி.டி.யு. தலைமை அலுவலகத்தில் பண்டித ஜவர்கலால் நேருவின் 134 -வது பிறந்தநாளை ஒட்டி குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
விழாவுக்கு நகரத் தலைவர் அகமது மைதீன் தலைமையில், மாவட்ட தொழிற்சங்க தலைவர் குலாம் மைதீன் முன்னிலையில், வலங்கைமான் வட்டார காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி ஜவர்கலால்நேருவின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைஅணிவித்து, பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் புத்தகங்கள் வழங்கி, பண்டித ஜவர்கலால் நேருவின் சாதனைகளையும், குழந்தைகள் தினம் பற்றியும் பேசினார்,
முன்னதாக வார்டு செயலாளர் மருதமுத்து அனைவரையும் வரவேற்றார். இதில் பொதுமக்களும், குழந்தைகளும் திரளாக கலந்து கொண்டனர்.