வலங்கைமான் செட்டித் தெரு மாரியம்மன் கோவில் எதிர்ப்புறம் நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் உள்ள சோலார் ஒளிரும் சிக்கனல் விளக்கு செயல்பாட்டில் இல்லை, அதன் அடிப்பகுதியில் சாலையில் பெரிய அளவில் பள்ளம் உள்ளது.

அதனால் கனரக வாகனங்கள் சிக்கி தவிக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டி தெரு மாரியம்மன் கோவில் எதிர்ப்புறம் ஒரு வழிச்சாலையும், குடவாசல் சாலையும் இணையும்இடத்தில் நெடுஞ்சாலை துறையினர் சார்பில், சோலார் ஒளிரும்சிக்னல் விளக்கு அமைக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை செயல்பாட்டில் இல்லை.

அந்த சிக்னல் விளக்கு உள்ள பகுதியில், கீழ்பகுதியில் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு மழைநீர் தேங்கி இருப்பதால் கனரக வாகனங்கள் திரும்பும் போது பள்ளத்தில் சிக்கி கொண்டு அவதி அடையும் தொடர்ந்து நடைபெறுகிறது,

எனவே சிக்னல் விளக்கையும், சாலை பள்ளத்தையும் நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *