தென்காசி மாவட்டம் நயினாரகரத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் எஸ். சுவாமி நாதன் ஜூனியர் கமிஷன் ஆபிசர் இயற்கை எய்தினார்.

சுவாமி நாதன் 1967-ம் ஆண்டு இந்திய சீனா போரிலும் , 1971-ம் ஆண்டு இந்திய பாக்கிஸ்தான் போரிலும் பங்காற்றியவர் இவருடைய நான்கு பிள்ளைகளில்
அதில் மூன்று மகன்களையும் இந்திய ராணுவத்திற்கு பணிய அமர்த்தி உள்ளார்

அவரின் இறுதிச்சடங்கிற்கு தென்காசி பட்டாளம் சார்பில் தென்காசி பட்டாளத்தின் தலைவர் . ராம்குமார் தலைமையில் முன்னாள் போர் வீரர் சுவாமிநாதன் உடலுக்கு தேசிய கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டு
இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் என்.ஆர் எஸ்.மணி கெளரவ தலைவர். ஜி.முத்து கிருஷ்ணன், துணை தலைவர் வி. கருப்பசாமி தென்காசி ஒன்றி ஒருங்கிணைப்பாளர், எம்.தவமுருகன், சிவகிரி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர், வி.ஐய்யப்பன் , செங்கோட்டை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சக்திகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *