செய்தியாளர்.ச.முருகவேலு
கண்டமங்கலம்
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம்
முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி ஆலோசனைக்கிணங்க, விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் நா.புகழேந்தி எம். எல். ஏ, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். பொன். கௌதமசிகாமணி ஆகியோர்வழிக்காட்டுதலின்படி
விழுப்புரம் தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் அரகண்டநல்லூர் பள்ளிவாசல் எதிரில் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டி கையெழுத்து பெரும் நிகழ்ச்சி எம்.எஸ்.கே.அக்பர் தலைமையில் நடைபெற்றது.
சிறுபான்மை அணி அமைப்பாளர் டி. என். ஏ. தமின் வரவேற்புரையாற்றினார் அ.சா.ஏ.பிரபு பேரூராட்சி மன்ற தலைவர் ராயல்.S.அன்பு,நகர செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் எஸ். கே. எஸ். முகமது அலி, விக்டர் பவுல் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார். ஒன்றிய கழகச் செயலாளர் ஒன்றிய நிர்வாகிகள் ஜெய்சங்கர் சக்தி, சிவம் மாவட்ட பிரதிநிதி டைகர் பிரகாஷ் பிரபு இளைஞர் அணி அமைப்பாளர் தினகரன் தகவல் தொழில்நுட்ப அணி ப. அன்பரசு, கிருஷ்ணராஜ் சரவணன், ஆசைத்தம்பி பரிமளம், சேட்டு, பாண்டுரங்கன் , ஷெரிப் அகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர் கையெழுத்திட்டனர்.